இந்த நாவல் தினமலர் வாரமலரில் தொடர்கதையாக வந்தது.ஒரு ஜனரஞ்சகமான இதழில் தொடர்கதை எழுதும் போது அதில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் வந்துவிடக்கூடாது. கூடவே அதில் இலக்கியத் தரத்தையோ அல்லது வேறுவிதமான உன்னதங்களையோ கலந்து ஒரு நாவலை உருவாக்குவது என்பது எழுதும் எழுத்தாளர்களின் தனித்தன்மையையும் திண்மையையும் பொறுத்த விஷயமாகும். ந்த மாயமாய் சிலர் நாவலும் ஒரு ஆன்மீக மர்ம்ப்படைப்பே இதை நான் வேகமாய் முடித்து விட்டதாக பலர் கூறினார்கள். நான் அப்படி நினைக்கவில்லை.இதுதான் இந்த நாவலுக்கான சரியான நீளம்.