You are here

"ஆஸ்திரேலியா - பல கதைகள்" - 2013 வருட சிறுகதைப் போட்டி முடிவுகள்

நண்பர்கள் அனைவருக்கும்  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்,

தாய்த் தமிழ்ப் பள்ளியின் "ஆஸ்திரேலியா - பல கதைகள்" சிறுகதைப் போட்டி அனைவரும் அறிந்ததே. இந்த அறிவிப்பு வெளியானவுடன் பலரும் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களின் அற்புதப் படைப்புகளை அனுப்பியிருந்தீர்கள். இந்தச் சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்ட உங்கள் அனைவருக்கும் தாய்த் தமிழ்ப் பள்ளி தமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

உங்கள் ஒவ்வொருவரின் படைப்பும் அற்புதமானவை. பல்வேறு தளங்களில், பரிமானங்களில், வடிவங்களில் எழுதப்பட்டிருந்தவை. போட்டிக்கு வந்த அனைத்து கதைகளும் ஏதேனும் ஒரு வகையில் சிறப்பானவையாகவே இருந்தன. இருப்பினும் நாங்கள் அறிவித்தபடி வந்த கதைகளில் சிறந்த மூன்று கதைகள் எவை என்பதை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நடுவர்கள் திரு.பாஸ்கர் சக்தி (எழுத்தாளர், பத்திரிகையாளர், திரைப்படக் கதாசிரியர், சென்னை) மற்றும் திரு.பாலு மணிமாறன் (எழுத்தாளர், தங்கமீன் பதிப்பக ஆசிரியர், சிங்கப்பூர்) ஆகியோருக்கு அளித்திருந்தோம்.

அவர்களின் தெரிவு செய்தபடி கீழ்க்கண்ட கதைகள் பரிசுக்குரியவை என அறிவிக்கப்படுகிறது. 

முதல் பரிசு
 விளக்கின் இருள் - கே.எஸ்.சுதாகர்

இரண்டாம் பரிசு
 வேல் அன்பன் - எஸ். கிருட்டிணமூர்த்தி

மூன்றாம் பரிசு
விண்ணைத் தாண்டி வருவேனே - இரா. சத்தியநாதன்


இளையோர் பிரிவிற்கான சிறப்பு பரிசு: 
  நான்  யார்? - ஜெயலக்ஷ்மி சித்திரசேனன்


ஆர்வத்துடன் கலந்துகொண்ட அனைவரும் இனிவரும் காலங்களில் மென்மேலும் பல புதிய படைப்புகளைத் தரவேண்டும். நம் தமிழ் மொழிக்கு வளம் சேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.